யாழில். பிரம்மாண்டமான திருக்குறள் வளாகம் : கருங்கல்லில் செதுக்கப்பட்ட குறள்கள் (காணொளி)
உலக பொதுமறை என்று அனைவராலும் அழைக்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். திருவள்ளுவர் மொத்தமாக 1330 குறட்பாக்களை இயற்றியுள்ளார்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்வழிகளையும் அந்த ஒரே நூலில் குறள் வழியாக நமக்கு எடுத்துரைத்துள்ளார். திருக்குறளானது மொழி, இனம், மதம், சாதி, சமயம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தக்கூடியது.
திருக்குறளானது இரண்டு அடிகளை கொண்டது. திருக்குறள் குறள் வெண்பா என்னும் பாவகையைச் சார்ந்தது. இதனால் தான் இது திருக்குறள் என்று வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருக்குறளின் பெருமையினை வெளி உலகத்திற்கு எடுத்து வரும் நோக்கில் சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வளாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.02.2025)) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருக்குறள் வளாகம் பற்றிய சிறப்பு தொகுப்பு கீழ் உள்ள காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)