காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய

Missing Persons Gotabaya Rajapaksa Supreme Court of Sri Lanka
By Sumithiran Oct 22, 2024 07:55 PM GMT
Report

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஒக்டோபர் 22) நடைபெற்ற விசாரணையின் போது அவரது சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா,ஊடாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிக்க முதலில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களால் அங்கு முன்னிலையாக முடியவில்லை என அவர் வாதிட்டார்.

 வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயார்

முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்றாலும், இலங்கையில் உள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்சவின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய | Lalith Kugan Case Gota Refuses To Come To Jaffna

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கவலைகள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவை மறந்து வேறொரு நாட்டை முதலில் அழைத்த அநுர அரசு..!

இந்தியாவை மறந்து வேறொரு நாட்டை முதலில் அழைத்த அநுர அரசு..!

ஜனாதிபதியாக இருக்கும் போது கோட்டாபய ராஜபக்சவை சாட்சியாக அழைக்க முடியாது என்று முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வாதங்களை கேட்டது.

உயிருக்கு அச்சுறுத்தல்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்காததால், சாட்சியம் அளிக்கும்படி கட்டாயப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கை மேலும் பரிசீலிப்பதற்காக, அடுத்த விசாரணையை மார்ச் 18, 2025க்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய | Lalith Kugan Case Gota Refuses To Come To Jaffna

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன செயல்பாட்டாளர்களின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அடுத்து யாழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆணையை அனுப்பியது. அந்த நேரத்தில், அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியாது என வாதிட்டதுடன் ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்தியாவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் விமான பயணங்கள்...! 50 வெடிகுண்டு அச்சுறுத்தல்

இந்தியாவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் விமான பயணங்கள்...! 50 வெடிகுண்டு அச்சுறுத்தல்

அவரது ஜனாதிபதி பதவி தற்போது முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் அவரை சாட்சியமளிக்க அழைக்கலாமா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும், இது முன்னாள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னோடியாக அமையும். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026