மறைகரத்தால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் பகுதி - எம்.பிக்களுக்கு கூட உள்நுழைய தடை
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் தெற்குப் பகுதியில் யுத்தத்திற்கு பின்னரான 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று(15) மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், பிரதிநிதிகள், பொதுமக்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காணி ஆக்கிரமிப்பு
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதிலும் நிலங்களை சுவீகரிப்பதிலுமே இந்த அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது.
குறிப்பாக பூநகரி பிரதேசத்தில் அட்டை பண்ணைகள், இறால் பண்ணைகள் என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
கிளிநொச்சியின் மண்டலாய், புல்லா வெளி ஆகிய பகுதிகளிலும் இரணைமடுக்குளத்தின் தெற்கு பகுதியிலும் சீன அரசாங்கத்துக்கு காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் இரணைமடுவின் தெற்கு பகுதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன் காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
உண்மைகளை அறிவதற்கான வழிமுறைகள்
குறிப்பாக, அந்தப் பகுதியில் இருக்கின்ற காணிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவுதல் அல்லது மறைமுகமாக காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
குறித்த பிரதேசங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் குறித்த பகுதிகளுக்கு சென்று உண்மைகளை அறிவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கிளிநொச்சி காடுகளுக்குள் சீனா..!
