வெளிநாடுகளுக்கு விற்கப்படும் விவசாய காணிகள் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

Trincomalee Sri Lanka SL Protest
By Shalini Balachandran Apr 28, 2024 10:52 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாமென கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று(28) இடம்பெற்றது.

1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதியமைச்சராக செயற்பட்ட மறைந்த மர்ஹூம் ஏ எல் அப்துல் மஜீத் அவர்களால் முத்து நகர் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது.

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது


துறைமுக அதிகார சபை

1984 இல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறை முக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவர்களால் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு விற்கப்படும் விவசாய காணிகள் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்! | Land Struggle In Trincomalee

ஆனால் அம் மக்களுக்கு இது வரை காணி உரித்துப் பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் துறை முக அதிகார சபையினர் தங்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இங்கு மூன்று விவசாய குளங்கள் காணப்படுகிறது சுமார் 788 விவசாய நிலங்களும் காணப்படுகிறது. 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்றாட ஜூவனோபாயமாக விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.

சுதந்திரக்கட்சியின் உண்மையான பிரதிநிதிகள் யார்..! மல்வத்துபீடத்திற்கு எழுந்த சந்தேகம்

சுதந்திரக்கட்சியின் உண்மையான பிரதிநிதிகள் யார்..! மல்வத்துபீடத்திற்கு எழுந்த சந்தேகம்


அதிகார சபையினர் 

துறைமுக அதிகார சபையினர் எங்கள் காணியை பெற்று இந்தியாவுக்கு தாரை வார்க்க பார்ப்பதுடன் இதனை அரசாங்கம் நிறுத்தி அதிபர் எங்கள் காணிகளுக்கான உரித்து படிவங்களை வழங்க வேண்டும் விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

வெளிநாடுகளுக்கு விற்கப்படும் விவசாய காணிகள் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்! | Land Struggle In Trincomalee

விற்காதே விற்காதே காணிகளை விற்காதே,விவசாய நிலங்களை மீட்டுத் தா ,நாட்டின் முதுகெழும்பு விவசாயம், துறை முக அதிகார சபையே விவசாய காணிகளை அபகரிக்காதே, 1972 இல் இருந்து விவசாய அநாதைகளாக நிர்க்கதியாக இருக்கிறோம் காணி உரித்து வடிவங்களை வழங்கு போன்ற வாசகங்களை உள்ளடக்கிய வகையில் பதாகைகளை ஏந்தியவாறு குறித்த முத்து நகர் விவசாய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதில் சுமார் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025