வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lanka
By Shalini Balachandran Jan 04, 2025 09:56 AM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் (R.Shanakiyan), தமிழ் மக்கள் விடுதலைப் புலி கட்சி பத்து ஏக்கருக்கு மேற்பட்ட காணியை பிடித்து வைத்துள்ளது என தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, இது சட்டத்துக்கு முரணானது எனவும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு மக்களையும் மற்றும் அதிகாரிகளையும் திசை திருப்பி குழப்புகின்ற செயற்பாட்டில் அவர்  ஈடுபட்டிருந்தார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மகாண சபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் ( Poopalapillai Prashanthan), மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வரும் அரிசி இறக்குமதி: வர்த்தக அமைச்சரின் எச்சரிக்கை

முடிவுக்கு வரும் அரிசி இறக்குமதி: வர்த்தக அமைச்சரின் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சி ம

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “75 வருடங்களாக செயல்படுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான கருத்துக்களையும், தெளிவூட்டல்களையும், மேற்கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஏக்கர் அல்ல 20 ஏக்கர் காணியினை நீண்ட கால குத்தகைக்குப் பெற்று மிகப் பிரமாண்டமான அலுவலகத்தை காட்டி மக்களுக்கு அரசியல் தொழில் செய்யுங்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களை தெளிவூட்டுவதற்காக சட்டப்படியாக மூன்று ஏக்கர் காணியைப் இவ்வாறு அரசியல் கலாசார தலைமைத்துவ நிலையத்தை அமைப்பதற்காக முன்வந்தால் அதனை மாற்றி 10 ஏக்கர் காணியினை சூறையாடி இருக்கின்றார்கள்,  காணியைக் கொள்ளை அட்டிருக்கின்றார்கள் என மிகப் பொய்யான வதந்திகளை கூறி அதிகாரிகளையும் மக்களையும் திசை திருப்ப வேண்டாம்.

வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Lands Illegally Seized By Pillayan Shanakiyan

மக்களுக்காக ஏதாவது நல்ல விடயங்களை செய்யுங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியல் கலாசார தலைமைத்துவ மத்திய நிலையம் அமைத்த பிற்பாடு எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கின்ற உறுப்பினர்களும் வந்து அங்கு இருக்கின்ற நூலகத்தை பயன்படுத்தலாம், அங்கு இருக்கின்ற மண்டபத்தை பயன்படுத்தலாம், முடிந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் வந்து செல்லலாம்.

எனவே, நாம் காணினை அடாத்தாக பிடித்து இந்த மண்டபத்தை அமைக்கவில்லை, சட்டப்படி அதற்கான ஆவணங்கள் அனைத்தும் கச்சேரியிலும், பிரதேச செயலகத்திலும் இருக்கின்றது அங்கு சென்று பரிசோதித்து பார்க்கலாம்.

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி

ஊழல் நிர்வாகம்

இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதியும் கூறியிருக்கின்றார் நாட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஊழல் நிர்வாகம் நடைபெற வேண்டும், உடனடியாக நிர்வாக சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என சொல்லி இருக்கின்றார்.

தற்போதும் அது தொடர்பான நடவடிக்கைகள் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது அந்த அடிப்படையில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் அதற்காகத்தான் மக்களும் ஆணை வழங்குகின்றார்கள், அவர்கள் சிறந்த முறையில் திட்டங்களை முன்னெடுப்பார்கள்.

வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Lands Illegally Seized By Pillayan Shanakiyan

நாட்டில் பொருளாதார ரீதியாக பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான சூழலில் மக்களின் அடிப்படை பிரச்சினையை தீர்த்து மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம்.

வறுமையில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்போம் என்ற அடிப்படையில்தான் நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கின்றார், அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை விட அதிகமாக பெரும்பான்மை கிடைத்திருக்கின்றது ஆகவே அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம், அவர் நிறைவேற்ற வேண்டும் மக்கள் அதற்காகத்தான் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024