பலாங்கொடையில் மண்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாயம்
Landslide In Sri Lanka
By Vanan
பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தேடும் பணிகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பகுதியில் கடும் இருள் சூழ்ந்துள்ளமை மற்றும் மழையுடனான வானிலை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்