மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை
மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிட்டுள்ளது.
இன்று (15.09.2026) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.
வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளும் எச்சரிக்கை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அடிப்படையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 9 மணி நேரம் முன்