லசந்தவின் கொலை - உறுதிப்படுத்திய பிரேத பரிசோதனை
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தறை பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இதன்போது, லசந்த விக்ரமசேகரவின் உடலில் இருந்து மொத்தம் ஆறு தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் அறிவிப்பு
இவ்வாறு, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஏற்பட்ட அபாயகரமான காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, லசந்த விக்ரமசேகர சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று முன்தினம் (22.10.2025) தனது உத்தியோகபூர்வ அலுவலக அறையில் இருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |