லசந்த படுகொலை விசாரணை : அரசிடம் அறிக்கை கோரும் நாமல்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Raghav Feb 10, 2025 03:14 AM GMT
Report

 ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு விசாரணை சுருக்கமொன்றை நீதி அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (09.02.2025) இடம்பெற்ற கிராமத்துக்கு கிராமம் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு இந்த அரசாங்கம் அநீதியிழைத்துள்ளது. 

ஊடகவியலாளர் பாரதியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்

ஊடகவியலாளர் பாரதியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்

அரசாங்கத்தின் ஆட்சி

தாம் கூறிய அனைத்தும் பொய் என்பதை அரசாங்கமே ஒத்துக் கொண்டதைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பழைமை முறையிலேயே இந்த அரசாங்கத்தின் ஆட்சியும் தொடர்கின்றது.

லசந்த படுகொலை விசாரணை : அரசிடம் அறிக்கை கோரும் நாமல் | Lasantha Wickramatunga Murder Investigation

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் நீதி அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். 

இந்த வழக்கு தொடர்பில் எத்தனை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன? என்பது குறித்த சுருக்கமொன்றை விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு முன்வைக்க வேண்டும்.

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈபிடிபி ஆதரவு

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈபிடிபி ஆதரவு

லசந்த விக்கிரமதுங்க படுகொலை

அதேவேளை அரசாங்கமானது நீதித்துறை, சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றை சவாலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும். 

லசந்த படுகொலை விசாரணை : அரசிடம் அறிக்கை கோரும் நாமல் | Lasantha Wickramatunga Murder Investigation

நீதி அமைச்சர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரியும் சட்டத்தரணியுமாவார். அவர் அரசியல் பயணத்தை நிறைவு செய்யும் போது மீண்டும் தொழில் நிமித்தம் நீதிமன்றம் செல்ல வேண்டியேற்படும்.

எனவே முன்னர் தான் பணியாற்றிய சட்டமா அதிபர் திணைக்களத்தை சவாலுக்குட்படுத்துவதை நீதி அமைச்சர் தவிர்த்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம். 

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொள்கைகளில் அரசாங்கம்

கிரிஷ் நிறுவனத்துக்கும் எனக்கும் றகர் போட்டிக்காக அனுசரணை பெற்றுக் கொண்டமை தொடர்பிலேயே தொடர்பிருக்கிறது. அது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கலாகும். எவ்வாறிருப்பினும் அதனை அரசியல் பழிவாங்கலுக்காக இந்த அரசாங்கம் பயன்படுத்துகிறது.

லசந்த படுகொலை விசாரணை : அரசிடம் அறிக்கை கோரும் நாமல் | Lasantha Wickramatunga Murder Investigation

தற்போது ஏற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கு கடந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறெனில் பரிசோதனையின்றி 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கும் கடந்த அரசாங்கத்தின் மீது பழிசுமத்தப்படுமா? தமது கொள்கைகளில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடனேயே இன்றும் செயற்பட்டு வருகிறது.

அநுரபிரிதர்ஷன யாபா மற்றும் யோஷித கைது செய்யப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பாக செயற்பட்டதாகக் கூறிய அரசாங்கம், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போது அதற்கு முரணாக விமர்சிக்கின்றது என்றார்.

திடீர் மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

திடீர் மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

ஜனவரியில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஜனவரியில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்