ஈரானுக்கு பேரிடி! மத்திய கிழக்கிற்கு நகர்த்தப்படும் அமெரிக்க ஏவுகணை அமைப்பு
ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் சில பகுதிகளையும் பிற இராணுவ உபகரணங்களையும் அமெரிக்கா தென் கொரியாவில் இருந்து மத்திய கிழக்கிற்கு மாற்றத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவில் அணு ஆயுதம் கொண்ட வட கொரியாவிற்கு எதிரான கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பெரிய இராணுவ இருப்பு உள்ளது.
அங்கு சுமார் 28,500 அமெரிக்க படையினரும், மேற்பரப்பில் இருந்து வானில் தாக்கும் பாதுகாப்பு அமைப்புகளும் பதியப்பட்டுள்ளன.
வட கொரிய தாக்குதல்
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு, THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சியோங்ஜு என்ற தென் கொரிய கிராமத்துக்கு வந்தபோது, அமைதியான அந்த கிராமம் வட கொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு மையமாக மாறியது.

இந்த அமைப்பு தென் கொரியாவை பியோங்க்யாங் ஏவுகணைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் ரேடார் அமைப்பு தங்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
தென் கொரியாவின் பாதுகாப்பு
இந்நிலையில், குறித்த ஆயுதங்களை மீள இடமாற்றும் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அளிக்கும் உறுதிப்பாட்டில் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அமெரிக்க ஆயுதங்களை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |