லசந்த, எக்னெலிகொட, தாஜுதீன் கொலை வழக்கு - சிக்குமா ராஜபக்ச குடும்பம்

Anura Kumara Dissanayaka Vijitha Herath Rajapaksa Family Crime
By Thulsi Oct 16, 2024 10:23 AM GMT
Report

லசந்த விக்கிரமதுங்க (Lasantha Wickrematunge), பிரதீப் எக்னலிகொட மற்றும் தாஜுதீன் ஆகியோரின் கொலைகள் மற்றும் கடத்தல்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்கள் தொடர்பிலும் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

இவற்றை தவிர்த்து பிரதான 7 குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

355 கோடி வரி ஏய்ப்பு செய்த அர்ஜுன் அலோசியஸ் - அரசு நடவடிக்கை

355 கோடி வரி ஏய்ப்பு செய்த அர்ஜுன் அலோசியஸ் - அரசு நடவடிக்கை

கொலை தொடர்பான விசாரணை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது அரசாங்கம் எந்தவொரு குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்காது இருக்கப் போவதில்லை. அதனால் தான் சமீபத்திய சம்பவங்களான தாஜுதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, மற்றும் பிரகீத் எக்னெலிகொட கொலை என அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக விசாரிப்போம்.

லசந்த, எக்னெலிகொட, தாஜுதீன் கொலை வழக்கு - சிக்குமா ராஜபக்ச குடும்பம் | Lasantha Wickramatunga Thajudeen Murder Case

கடந்த காலங்களில் இடம்பெற்ற தாஜுதீன் கொலை, லசந்த விக்கிரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

பிரகீத் எக்னெலிகொட கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. மீண்டும் ஒரு விசாரணை தேவையில்லை.

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

7 முக்கிய குற்றவியல் வழக்குகள்

இந்நிலையில் கூடிய விரைவில் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய 7 விடயங்கள் இருப்பதாலேயே அவை தொடர்பிலேயே நாங்கள் கூறியுள்ளோம்.

லசந்த, எக்னெலிகொட, தாஜுதீன் கொலை வழக்கு - சிக்குமா ராஜபக்ச குடும்பம் | Lasantha Wickramatunga Thajudeen Murder Case 

ஆனால் அதுமட்டுமன்றி. கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து வகையான குற்றச் செயல்கள், கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி சட்டத்தை செயற்படுத்துவோம்.

7 முக்கிய குற்றவியல் வழக்குகள் துரித விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டு அவசரமாக முடிக்கப்பட வேண்டியுள்ளது. மற்றபடி 7 தான் என்று தவறாக எண்ண வேண்டாம்.

கடந்த காலங்களில் நடந்த அனைத்துப் பொருளாதாரக் குற்றங்கள், கொலைகள், ஊடகவியலாளர்கள் கடத்தல் போன்ற அனைத்துச் செயல்களுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு மோசடி

இதேவேளை, இலங்கையின் நீதித்துறை தமது எல்லைக்குள் அரசியல் செல்வாக்கு இல்லாமல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

லசந்த, எக்னெலிகொட, தாஜுதீன் கொலை வழக்கு - சிக்குமா ராஜபக்ச குடும்பம் | Lasantha Wickramatunga Thajudeen Murder Case

அர்ஜுன அலோசியஸுக்கு வரி ஏய்ப்பு மோசடியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறான நிதிக் குற்றவாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று குறுகிய காலப்பகுதியிலேயே அரச பொறிமுறையில் பலம் வாய்ந்த நிறுவனங்கள் தமது துறைகளில் சுயாதீனமாக செயற்படுவது சாதகமான அணுகுமுறையை எடுத்துக்காட்டுவதாகவும் அந்த ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விஜித ஹேரத்தின் சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விஜித ஹேரத்தின் சவாலுக்குப் பதிலளிக்கவுள்ள உதய கம்மன்பில

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024