சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றது.
குறித்த தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685 வேட்பாளர்களில் 79 வேட்பாளர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.
அதன்படி, பொதுசன ஐக்கிய முன்னணி கட்சியைச் சேர்ந்த 39 வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக்கட்சி 01 வேட்பாளரும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியைச் சேர்ந்த 01 வேட்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 37 வேட்பாளர்களும், சுயேட்சைக்குழு 01 ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவே காவல்துறையினர் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்
இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 79 பேருக்கும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெவ்வேறு திகதிகளில் வழக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |