அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விதிக்கப்பட்டது காலக்கெடு
அமெரிக்காவில்(us) சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக ட்ரம்ப் (donald trump)அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள், கைது செய்யப்பட்டு, கைவிலங்கு மாட்டி விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிக்கை
இந்நிலையில், அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவை ஏற்க மறுப்பவர்கள், அபராதம் மற்றும் சிறை தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் சொல்லும் செய்தி - தாமாக முன்வந்து உடனடியாக வெளியேறுங்கள்.
தாமாக வெளியேறினால் கிடைக்கும் பலன்
இதனால் கிடைக்கும் பலன் *தாமாக முன்வந்து வெளியேறுவது பாதுகாப்பு. நீங்கள் விருப்பப்படும் விமானத்தில் செல்லலாம். *நீங்களாகவே வெளியேறும்பட்சத்தில், அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ள முடியும். *நாங்களாக வெளியேற்றாமல், நீங்களாக வெளியேறினால், எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவிற்கு வர முடியும்.
விரும்பும் விமானத்தில் பயணிக்க சலுகை கிடைக்கும். பின்விளைவுகள் தாமாக வெளியேறாதவர்கள், *கைது செய்யப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள். எந்த வாய்ப்பும் கிடைக்காது. *வெளியேற உத்தரவு கிடைத்த நாளுக்கு பின்னர் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
தாமாக வெளியேற விரும்பாதவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. *எதிர்காலத்தில் சட்டப்படி மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
