தென்னகோனை கைது செய்வதை தவிர்க்க உதவியவர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்
பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை(deshabandu tennakoon) கைது செய்யாமல் இருக்க உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாத்தறை நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச இன்று(20) உத்தரவிட்டார்.
தென்னகோனின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டிக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நிறைவேற்றுவதைத் தடுக்கக் கோரிய தென்னகோனின் ரிட் மனுவை மார்ச் 17 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் தென்னகோனைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்
வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தென்னகோன் தேடப்பட்டு வந்தார். இதில் கொழும்பு குற்றப்பிரிவு (சிசிடி), வெலிகம காவல்துறை மற்றும் சிறப்புப் படை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒரு சிசிடி அதிகாரி கொல்லப்பட்டார், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது,இந்த சம்பவத்தில் தென்னகோனின் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
பெப்ரவரி 28, 2025 அன்று அவரைக் கைது செய்வதற்கானபிடியாணைபிறப்பிக்கப்பட்டது, அதோடு சர்வதேச பயணத் தடையும் விதிக்கப்பட்டது. இதுபோன்ற போதிலும், அவர் பிடிபடுவதைத் தவிர்த்துவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்