மூன்று மாதங்களுக்குள் முடியுங்கள் -கோட்டாபயவிற்கு பறந்த கடிதம்
கடந்த 9 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பில் ஆராய விசேட அரச தலைவர் ஆணைக்குழுவை (உண்மையறியும் ஆணைக்குழு) நியமிக்குமாறு கோரி சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர் மன்றம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பொருத்தமான ஆணைக்குழுவை நியமித்து அதன் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பேரவையின் தலைவர் வண.அத்துரலியே இரத்தின தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச , லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர டொக்டர் ஜி. வீரசிங்க, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.பி வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா ஆகியோர் கையொப்பமிட்டு அரச தலைவருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.