முடி கொட்டுதே என்று கவலையா? இப்படி முயற்சி செய்து பாருங்க - பலன் கண்டிப்பா கிடைக்கும்!
ஒரு ஆணுக்கு உயிரினும் மேலானது முடி. முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் ஒவொரு ஆணும் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வருத்தப்படுகிறான்.
தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
எந்த பிரச்சினை இருந்தாலும் சமாளிக்க முடியும்.ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் வழுக்கை தலை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.
அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்
- ஆலிவ் ஆயில்
- முட்டை மாஸ்க்
இவற்றை எப்படி பயன்படுத்துவது?
வெங்காயம்
சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். பின்பு அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வையுங்கள். அரைமணிநேரம் கழித்து ஷம்பூ போடு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. இதனை தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.
1 மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில், 1 மேசைக்கரண்டி தேன் மற்றும் 1 கரண்டி (டீ ஸ்பூன்) பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். பிறகு மைல்டு ஷம்பூ கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.
முட்டை மாஸ்க்
முட்டையின் மஞ்சள் கருவில் தான் இரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள்.
பின்பு மஞ்சள் கருவில் 1 கரண்டி (டீ ஸ்பூன்) ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
இதனை கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
