லிட்ரோ எரிவாயுவை கொள்வனவு செய்ய புதிய நடைமுறை! வெளியான விசேட அறிவிப்பு
இன்று முதல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில் விநியோகத்தில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது லிட்ரோ நிறுவனம்.
இதன்படி, சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க குறித்த நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு வந்தடைந்த கப்பல்
கையிருப்பு தீர்ந்தமையால் லிட்ரோ நிறுவனம் நீண்ட நாட்களாக தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தது.
இந்நிலையில், 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று நாட்டை வந்ததனை அடுத்து இன்று விநியோகத்தை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, மீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயுவின் விலை! இன்று முதல் நடைமுறைக்கு