இலங்கை அச்சகத்தின் அறிவிப்பு மாபெரும் சூழ்ச்சியே - வரலாற்றில் என்றும் இல்லாத சம்பவம்!
இலங்கை அச்சகத்தின் அறிவிப்பு, சூழ்ச்சியின் ஓர் அங்கம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாது என இலங்கை அச்சகம் தெரிவித்திருந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச அச்சகத் தலைவரின் ஊடாக இந்த சூழ்ச்சி இடம்பெறுகின்றது. வரலாற்றில் ஒரு நாளும் பணம் இல்லை என்று இவை இடம்பெறவில்லை. பணம் இல்லையென்றே இந்த நாடகம் நடக்கின்றது.
தோல்வி அச்சத்தில் ரணில் மற்றும் ராஜபக்சாக்கள்
இலங்கை மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காது, தற்போதைய அரசாங்கம், வாக்குரிமையையும் இல்லாது செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றது.
எனினும், அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை. இந்நிலையில் தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது” எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
