எவரது உரிமையையும் பறிக்கும் நோக்கம் எமக்கில்லை - சஜித் மற்றும் அநுரவுக்கு பதிலடி!
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவை குறித்து தான் எதுவும் பேசப்போவதில்லை என சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் குறித்து பொது நிர்வாக அமைச்சர் என்ற ரீதியில் அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியை தீர்க்கும் கலந்துரையாடல்
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க அடுத்த வாரத்தில் நாம் எதிர்கொள்ளவுள்ள பெரும் நெருக்கடி குறித்தே தானும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்தி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.