தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Dharu Jun 19, 2026 07:49 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்ச 2005 முதல் 2015 வரை பாதுகாப்பு செயலாளராக (Defense Secretary) பதவி வகித்த காலம், இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டமாகவும் அதற்குப் பிந்தைய காலமாகவும் இருந்தது.

இக்காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மிகத்தீவிரமாகவும், கடுமையான முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது.

ஆட்சியில் இருந்தவரை சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தினார்; இன்று அதே சட்டம் அவரைக் கேள்வி கேட்கிறது. அது தமிழ் மக்களின் கண்ணீருக்கும், கதறல்களுக்கும் பதில் கேட்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்!

பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய

பாதுகாப்பு செயலாளராக அவர் இருந்தபோது இச்சட்டம் நீண்ட கால தடுப்புக்காவல், வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டித்தல், வெள்ளை வான் கலாச்சாரம் மற்றும் கடத்தல்கள், போருக்குப் பிந்தைய புனர்வாழ்வு என்ற திட்டம் என நகர்ந்துக்கொண்டிருந்தது.

தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய | Gotabaya Who Is Being Targeted Over Time Pta

இச்சட்டத்தின் கீழ், எவ்வித நீதிமன்ற அனுமதியோ அல்லது பிணையோ இன்றி, சந்தேக நபர்களை 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு முழு அதிகாரம் இருந்தது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்

சாதாரண சட்டங்களின்படி காவல்துறையிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆனால், PTA சட்டத்தின் கீழ், காவல்துறை அதிகாரியிடம் பெறப்படும் வாக்குமூலமே பிரதான சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இக்காலத்தில் சித்திரவதைகள் மூலம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், உத்தியோகபூர்வ கைதுகளுக்கு அப்பால், உளவுத்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரால் 'விசாரணைக்காக அழைத்துச் செல்லுதல்' என்ற பெயரில் வெள்ளை வான்களில் மக்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் இக்காலத்தில் பரவலாக அரங்கேறின.

ஈஸ்டர் தாக்குதல் அரசியல் கரும்புள்ளிக்குள் மறைந்து கிடக்கும் இரகசியங்கள்

ஈஸ்டர் தாக்குதல் அரசியல் கரும்புள்ளிக்குள் மறைந்து கிடக்கும் இரகசியங்கள்

சர்வதேச செய்தியாளர்களின் அறிக்கை

Gotabhaya acknowledges use of white vans to “take in” suspects, Gotabaya RAJAPAKSA - RSF என்ற சர்வதேச செய்தியாளர்களின் அறிக்கை இதன் கொடுமைகளை உலகுக்கு வெளிப்படுத்தி அதன் பாரதூரத்தை விளக்கியது.

தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய | Gotabaya Who Is Being Targeted Over Time Pta

இது குறித்து சர்வதேச ரீதியில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மீதான ஒடுக்குமுறை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு எதிராக மட்டுமன்றி, அரசாங்கத்தின் போர் உத்திகளை அல்லது ஊழல்களை விமர்சித்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் இச்சட்டம் அச்சுறுத்தலாகப் பயன்படுத்தப்பட்டது.

அத்தோடு 2009 இல் போர் முடிவடைந்த பின்னர், சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல், PTA சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைத்து புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பும் முடிவுகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டது.

கொடுங்கோன்மையான இலங்கை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (“PTA”) நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. பல பத்தாண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் காலத்திலிருந்து, இந்த PTA இலங்கை குடிமக்களை அச்சுறுத்தி வருகிறது.

பிடியாணையின்றி குடிமக்களை பதினெட்டு மாதங்கள் வரை தன்னிச்சையாகத் தடுத்து வைக்கவும்; வாக்குமூலங்களைப் பெறுவதற்காக சித்திரவதையைப் பயன்படுத்தவும்; போராட்டக்காரர்கள், சிறுபான்மைக் குழுக்கள் மற்றும் அரசியல் எதிரிகளைக் குறிவைக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கு PTA அதிகாரம் அளிக்கிறது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல், எண்ணற்ற மனித உரிமை மீறல்களுக்கு PTA ஒரு களத்தை உருவாக்குகிறது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தச் சட்டத்தின் பயன்பாடு தீவிரமடைந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

PTAவின் பயன்பாடு 

தற்போது, ​​போராட்டக்காரர்கள், அரசியல் எதிரிகள், இன மற்றும் மத சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைத் தடுத்து வைக்க PTA பயன்படுத்தப்படுகிறது.

தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய | Gotabaya Who Is Being Targeted Over Time Pta

இலங்கையின் பாதுபாப்பு செயலாளராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த சட்டத்தை தனக்கும் தன் திட்டங்களுக்கும் கோலோச்சி வைத்துக்கொண்ட அவர்கள் இன்று அதன் வசமே சிக்கிக்கொண்டுள்ளார்.

தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் பயங்கரவாத தடைச்சட்டம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பக்கம் திரும்பியுள்ளது.

இது குறித்து நேற்று இடம்பெற்ற வழக்கின் முடிவில் கோட்டாபயவுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் திரும்பும் பல விடயங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் அவரைத் தொடர்புபடுத்துவதற்கு இன்றுவரை எந்த ஆதாரமும் வெளிப்படுத்தப்படாததால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டால் அவரது அடிப்படை சுதந்திரங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா நேற்று (18) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

பிரித்தானியாவின் சேனல் 4 ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையின் போது இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இந்த மனு விசாரிக்கப்பட்டது. மேலும், காவல்துறைத் தலைவர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட ஒரு குழுவினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் ஏற்கனவே தனது கட்சிக்காரருக்குப் பயணத் தடை விதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி , சேனல் 4-இடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவதற்கான கடுமையான அபாயம் இருப்பதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை

ஷானி அபேசேகர

குறிப்பாக, மனுவில் பிரதிவாதியாக உள்ள சிஐடி-யின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் பொய்யான சாட்சியங்களைத் தயாரித்ததற்காகக் கைது செய்யப்பட்ட ஓர் அதிகாரி என்றும், அத்தகைய ஒருவரிடமிருந்து நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்றும் ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டார்.

தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய | Gotabaya Who Is Being Targeted Over Time Pta

எந்தவொரு முன் விசாரணையுமின்றியும் சாட்சியமின்றியும் ஒருவரைக் கைது செய்வது, அரசியலமைப்பின் இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கு முரணானது என்றும், இது உயர் நீதிமன்றம் வழங்கிய 'ராடா வழக்கின் தீர்ப்பிலிருந்தும்' தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டிய அவர், சட்டமா அதிபர் திணைக்களம் சிஐடி-யின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுவர்ஷி ஹெரத், மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்தின் சார்பாக அல்லாமல் ஊடகங்களின் சார்பாக உண்மைகளை முன்வைப்பதாகத் தோன்றுவதாகப் பதிலளித்தார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் மனுதாரர் சார்பில் முன்னிலையாகியுள்ளார்.

இந்நிலையில் வாதங்களை கருத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான மேலதிக விசாரணையை 24ஆம் திகதி நடத்த முடிவு செய்தது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025