கருணா - விடுதலைப்புலிகள் பிளவு : உண்மையில் நடந்தது என்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு, கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி - போன்றன பற்றியும், கருணா விவகாரத்தில் இதுவரை வெளிவராத பல இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த நிகழ்ச்சி.
கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள், அதன் பின்னர் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்த நிழல் யுத்தம், 4ஆம் கட்ட ஈழ யுத்தத்தில் கருணாவின் பிரிவு ஏற்படுத்திய தாக்கம், கருணா - புலிகள் பிரிவின் பின்னணியில் இருந்த சர்வதேச புலனாய்வுத்துறைகளின் கரங்கள் - என இப்படி பல விடயங்களை ஆராய்கின்றது 'உண்மைகள்' என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி.
ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் ‘ஐபிசி தமிழ்’ இணையத்தளத்தில் வெளியிடப்படும் இந்த தொடர், இன்றைக்கு சுமார் 20 வருடங்களுக்கு முந்திய பல காட்சிகளை உங்கள் கண்முன் கொண்டுவந்து சேர்க்கும் என்று திடமாக நம்புகின்றேம்.
‘கருணா புலிகள் பிளவு : நடந்தது என்ன?’ என்ற பரபரப்புத் தொடரின் முதலாவது பாகம் இதோ உங்களுக்காக......