இந்திய அரசின் நிலைப்பாடு : தலைவர் பிரபாகரன் தொடர்பில் முக்கிய சமிக்ஞை..! மேஜர் மதன் குமார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்தால் இந்தியா எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது தொடர்பில் இந்திய இராணுவத்தின் முன்னாள் மேஜர் தர அதிகாரி மதன்குமார் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் இணைத்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
''விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வருகிறார் என்றால் இதற்கு நான் ஒரு சமிக்ஞையை கூறுகிறேன்.
ஏழு பேர் விடுதலை
ரஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்பு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட அந்த ஏழு பேர் விடுதலையின் போது இன்று மத்திய அரசை ஆளக்கூடிய மத்திய பாஜக அரசு அதை எதிர்க்கவில்லை.
நீதிமன்றில் குறிப்பிடப்பட்ட கருத்துக்களை பார்த்தால் இதை பெரிய அளவிற்கு எதிர்க்கவில்லை என்பது தெரிகிறது.
இரண்டாவது விடயம், இந்த கொலை வழக்கில் தொடர்ந்திருந்த விசாரணைகள் கிட்டத்தட்ட காலாவதியாகிவிட்டது.
ஒரு சமிக்ஞை
இதனை பெரிய ஒரு அரசியல் பிரச்சினையாக பாஜக எடுத்துச் செல்லவில்லை. இதையே ஒரு சமிக்ஞையாக எடுத்துக் கொள்ள முடியும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நாளையே வருவதாக இருந்தாலும் பழைய விடயங்களை எடுத்துக் கொண்டு இந்தியா கடந்த கால கண்ணோட்டத்தில் குறித்த பிரச்சினைகளை அணுகாது என தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
