சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றவுள்ள விடுதலை புலிகளின் கொள்கை உடையவர் - பதறும் அரசியல்வாதி
விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றப்போவதாக தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (22.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரத்வீரசேகரவின் அறிக்கை நிராகரிப்பு

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முன்வைத்த அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். மறுசீரமைப்பு என்ற பெயரில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு பதிலாக இலாபம் ஈட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறி லங்கன் எயார்லைன்ஸ் - மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில்

நட்டமடையும் சிறி லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் உள்ளதுடன் டெலிகொம் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் வசமும் காணப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திடம் உள்ள 50 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.