கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்து - ஒருவர் பலி: பலர் காயம்
புதிய இணைப்பு
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பிலிருந்து (Colombo) மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
