உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மோசடி..! சூத்திரதாரிகளான இலங்கையர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Madras High Court
By Kiruththikan Oct 08, 2022 03:34 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

பிணை

மும்பையில் உயிரிழந்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஆவணங்களைத் தயாரித்து 40 கோடி ரூபாவை திருட முற்பட்ட இலங்கையர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

மும்பை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை மோசடி செய்து எடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலியாக பெறப்பட்ட ஆவணங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்புக் கணக்கில் ஹமிதா ஏலால்ஜி என்பவர், 40 கோடி ரூபாய் பணத்தை வைப்பு செய்திருந்தார்.

கையாடல் செய்ய முடிவு செய்த இலங்கையர்

உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மோசடி..! சூத்திரதாரிகளான இலங்கையர்கள் | Madras Court Rejects Default Bail To Sri Lankans

எனினும் குறித்த பெண் இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்து வந்தது.

இதை தெரிந்துகொண்ட ஐரோப்பாவில் வசிக்கும் உமா காந்தன் என்பவர், அத்தொகையை கையாடல் செய்ய முடிவு செய்தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பணத்தை கைப்பற்றுவதற்காக இலங்கை தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரை இந்தியாவிற்கு சென்று ஆதார் அட்டை, கடவுச் சீட்டு போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

அவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன், ஜோன்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் ஆகியோர் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து, 40 கோடி ரூபாயை எடுக்க முயற்சித்தனர்.

ஆனால், போலி கடவுச் சீட்டு வழக்கில் லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்படாத குற்றப் பத்திரிகை

உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மோசடி..! சூத்திரதாரிகளான இலங்கையர்கள் | Madras Court Rejects Default Bail To Sri Lankans

தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 90 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், அரசுத் தரப்பு அறிக்கையை ஏற்று, மேலும் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கி, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தது.

தங்களுக்கு சட்டபூர்வ பிணை வழங்கக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கென்னிஸ்டன் ஃபெர்னாடோ, பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அமைப்பினர், கடந்த மார்ச் 29ம் திகதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், சட்டபூர்வ பிணை வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025