மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.!

Astrology Hinduism
By Vanan Sep 10, 2022 02:51 PM GMT
Report

இந்த ஆண்டுக்கான மகாளய பட்சம் நாளை (11) முதல் செப்டம்பர் 25ஆம் திகதி வரை நடக்க இருப்பதுடன், செப்டம்பர் 25ஆம் திகதி மகாளய அமாவாசை தினம் ஞாயிறு கிழமையில் வருகின்றது.

ஆவணி பெளர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது.

மகாளய பட்சம் எனும் இந்த 15 நாட்கள் அடங்கிய புண்ணிய தினத்தில் எந்த நாளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம் என்பது ஐதீகம்.

சனிப் பெயர்ச்சி - ஆட்டிப்படைக்கப் போகும் 'அஷ்டமத்து சனி' : இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!

பித்ரு பட்சம் / மகாளயம்

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

“கன்யா கதே சவிதரி ஸக்ருத் ஆஷாடாதி பஞ்சம அமர பக்ஷே” சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர்.

மேற்கண்ட பதினைந்து நாள்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம் செய்வது சிறப்பு.

மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாட்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு.

இந்நாட்களில் தர்ப்பணம் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவது ஒரு நாளில் மகாளய பட்சத்திற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மகாளய அமாவாசை

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும்.

முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக மகாளய அமாவாசை கருதப்படுகிறது. 'மகாளயம்' என்றால் 'பெரிய கூட்டம் என்றும் பொருள்'.

செப்டம்பர் மாத ராசிபலன்! கிரகப் பெயர்ச்சியில் வக்ர நிலை - பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம்

மகாளய பட்சம்

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

பொதுவாக ஒவ்வோர் அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் யமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்குச் சென்று வரும்படி அனுமதிப்பாராம்.

நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மகாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்து இருப்பதாக நம்பிக்கை.

இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி. எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல, நம் தலைமுறைக்கும் சேர்த்துதான்.

மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

முன்னோர்களின் அருள் பெற செய்ய வேண்டியவை

அரச மரத்தை வலம் வருதல்

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

மரங்களில் மிக புனிதமானதாகக் கருதப்படுவது அரச மரம். அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தரக்கூடிய விநாயகரை, இந்த தினத்தில் அரச மரத்தை சுற்றிவந்து கணபதியை வணங்கி வருவது புண்ணியத்தைத் தரும். இப்படி செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, நம் உடல் நலமும் சிறக்கும். நீண்ட நாள் வாழ முடியும்.

உணவளித்தல்

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

அற்புதமான மகாளய பட்ச காலத்திலும், அமாவாசை நாட்களில் காகம், எறும்பு, பசு, நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் நம்முடைய பாவங்கள் நீங்குவதோடு, நிகரில்லா இறைவன், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

தானம் அளித்தல்

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

மகாளய அமாவாசை மட்டுமல்லாமல், மகாளய பட்சம் தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், உப்பு, உடைகள், வெல்லம், பார்லி போன்ற உணவு பொருட்களை தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

தண்ணீர் தானம்

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அதில் இந்த தண்ணீர் தானமும் அடங்கும். தேவையான தாகத்தில் இருப்பவர்களுக்கும் மக்களுக்கு தண்ணீர் தானம் கொடுப்பதும், குடிக்க இனிப்பு கலந்த தண்ணீரைப் பருக கொடுப்பதும் சிறந்தது. இந்த 15 நாட்களில் தினமும் சிவ பெருமான் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வருவது சிறந்த அம்சமாக இருக்கும்.

சனி பகவான் வழிபாடு

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

எப்போதும் ஏழை, எளியோரை தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக்கூடாது. குறிப்பாக இந்த காலத்தில் பிறருக்கு உதவுதல் நலம். ஒருவரை அவமதித்தால் சனி பகவானால் தண்டிக்கப்படுவீர்கள். நாம் அவர்களுக்கு உதவியோ, மரியாதை கொடுத்தாலே போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.

மிக புண்ணியமான மகாளய அமாவாசை தினத்தில் நற்காரியங்களை செய்து இறைவனின் அருளும், முன்னோர்களின் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

முன்னோர்களை வணங்குவது

மகாளய பட்சம் நாளை ஆரம்பம் - வீடுதேடிவரும் முன்னோர்களை வரவேற்பது எப்படி.! | Mahalaya Paksha Pitru Paksha Mahalaya Amavasai

குல தெய்வ வழிபாடு, இறைவனை வணங்குவதும் சிறப்பான விஷயம் தான். அதே போல நம் முன்னோர்களை வணங்குவதும், தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்த காலம் இந்த மகாளய பட்சம். இதனால் நம் வாழ்க்கை வளம் பெறும்.

ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து அந்த தீபத்தைப் பார்த்து வணங்குவது மிகவும் நல்லது. நம் முன்னோர்களை வழிபடுவதும், கடவுளிடம் பிரார்த்தித்தலும் உங்களின் மன அமைதியும், ஆசீர்வாதமும் கிடைக்கும்.    

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011