14 வழக்குகள் உள்ளன! முடிந்தால் கைது செய்யுமாறு மகிந்த சவால்
Sri Lanka
Sri Lankan political crisis
Law and Order
By Dharu
தனக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எங்கள் மீது தவறு இருப்பதாக ஆதாரங்கள் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அநுர அரசாங்கத்திற்கு மகிந்த சவால் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட மகிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்து விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம், அவரை இன்று ஹீரோவாக மாற்றியுள்ளனர்.
நாட்டில் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு வீரனாக ரணில் மாறியுள்ளார்.
அதற்கான வாய்ப்பினை இந்த அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதாக மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரை பற்றிய பேச்சுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி