மீறப்பட்ட நிலையியற் கட்டளை! அர்ச்சுனாவுக்கு மகிந்த ஜயசிங்க சவால்
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை சட்டங்களின்படி தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க குற்றம் சுத்தியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கம்போது குறுக்கிட்டதால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு கடும் தொனியில் பதில் வழங்கினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
சமிந்த விஜேசிறி
“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தொிரிவித்த கருத்தால் இந்த உயரிய சபையில் வைத்து தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

அவர் குறிப்பிட்ட விடயங்களை பார்க்கின்றபோது, “ தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளீர்கள். நீதிமன்றங்களில் உங்களுக்கு வழக்கு உள்ளன. நீங்கள் இன்று சிறந்த உடை அணிந்திருந்தாலும் நீங்கள் ஒரு திருடன்” என்றார் சமிந்த விஜேசிறி.
இவ்வாறான அடிப்படையற்ற விடயங்களை சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமான எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கருதுகின்றேன். மேலும் இதனை சிறப்புரிமை குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டினார்.
அர்ச்சுனா இராமனாதன்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமனாதன் குறுக்கிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய மகிந்த ஜயசிங்க,
“முடியுமென்றால் அர்ச்சுனாவுக்கு சவால் விடுக்கின்றேன். எனது கூற்றுக்கு எதிராக கருத்து தெரிவிக்குமாறு சவால் விடுக்கின்றேன்.
மற்றவர்களின் பிரச்சினைகளில் மூக்கை நுழைக்காது கொஞ்சம் பொறுமையாக, அமைதியாக இருங்கள்” என கடும் தொனியில் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |