மகிந்தவின் அரசியல் பயணம் முடிகிறதா..!! இந்திக்க அனுருத்த வெளியிட்ட தகவல்
மகிந்த ராஜபக்ச அரசியலை நிறுத்த மாட்டார் எனவும் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
மகிந்த முன்னுதாரண தலைவர்
"மகிந்த ராஜபக்ச எமது முன்னுதாரண தலைவர். அவரை பார்த்தே தற்போது பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எந்த நிலைமையும் ஒத்து போகும். அரச தலைவர், பிரதமர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அனைத்திலும் மகிந்த ராஜபக்ச ஒன்றுதான் என ஒரு முறை அவர் கூறியிருந்தார்.
அவருக்கு 50 வருடத்திற்கும் மேற்பட்ட அரசியல் அனுபவம் இருக்கின்றது. சில பதிவுகளை பதிவேற்றி, மகிந்த ராஜபக்சவை மனரீதியாக வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர். அவர் அப்படி சளைத்து போகும் நபர் அல்ல.
நாங்கள் நாளைய தினம் அவரை சந்திக்க சென்றாலும் அரசியல் பற்றி எங்களுடன் பேசுவாரே தவிர எம்மிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளை பற்றி பேச மாட்டார்.
எரிபொருள் நெருக்கடி
நாட்டுக்கு தேவையான அளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டும், அவசியமான அளவுக்கு எரிபொருள் இன்றி அவற்றை வழங்குவதற்கு அத்தியவசிய சேவைகள் என பிரிப்பது பலனளிக்காது.
பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பதவி வகித்த போது துரிதமாக எரிபொருளை கொண்டு வர பல பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அத்தியவசிய சேவையோ வேறு எந்த சேவை என பெயரிட்டாலும் தண்ணீரை எடுக்க முதலில் குடம் நிறைய வேண்டும். தேவையான அளவுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யாது, வரையறை விதித்தாலும் அது சரியாக நடக்காது", எனக் குறிப்பிட்டார்.