மக்கள் அழைத்தால் மகிந்த மீண்டும் வருவார்!
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kanna
மகிந்தவின் அரசியல் தொடர்பில் டீ.பி. ஹேரத் வெளியிட்ட தகவல்
மக்கள் கோரினால் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இன்று(26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.
இருப்பினும் மக்கள் அவரை மீள அழைத்த காரணத்தால் அவர் வந்து ஆட்சியை பிடித்தார். எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார்", எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு எனவும் ஹேரத் சுட்டிக்காட்டினார்.