தோல்வியடையும் அநுர அரசின் முயற்சிகள்! மகிந்த பகிரங்கம்
SLPP
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
NPP Government
By Dilakshan
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முயற்சி செய்து வந்தாலும் தோல்வியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எல்லாவற்றிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் மகிந்த கூறியுள்ளார்.
எதிர்மறை அம்சங்கள்
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எல்லாவற்றிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அவர்களிடம் முயற்சிகள் இருந்தபோதிலும், அவை தோல்விகளில் முடிகின்றன. இந்த அரசாங்கத்தில் சில நேர்மறையான அம்சங்களை நாம் காண்கிறோம், பிரச்சனை என்னவென்றால், அதில் பெரும்பாலானவை எதிர்மறையானவை” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி