மைத்திரி தரப்புக்கு விழுந்த பலத்த அடி - மனநிலையை மாற்றவும் கோரிக்கை
தற்போதைய ஆளும் கூட்டணியில் முக்கிய கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மனதில் கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர கரியவாசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"சில சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் இன்னும் அதே பழைய மனநிலையில் இருக்கிறார்கள், அதாவது அவர்கள் பிரதான கட்சி என்ற மனநிலையில் இருக்கிறார்கள், ஏனென்றால் முந்தைய கூட்டணிகளில் சுதந்திரக்கட்சி எப்போதும் பிரதான கட்சியாக இருந்து வந்தது. ஆனால் இப்போது ஸ்ரீ.ல.சு.க. கூட்டணியில் உள்ளது. பிரதான கட்சி அல்ல, பொதுஜன பெரமுனவே பிரதான கட்சி.
எனவே அரசியல் முதிர்ச்சியைக் கொண்ட அங்குள்ள தலைவர்கள் அதைப் புரிந்து கொண்டதாக நான் நினைக்கிறேன். சிலர் அதை உணராமல் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் தீர்க்கப்பட்டு சாதகமாக முன்னேற முடியும் என்று ஒரு கட்சியாக நாங்கள் நம்புகிறோம் என்று நான் நினைக்கிறேன்.
கே. உங்களுடன் இருக்கும் மற்ற கட்சிகள் பொதுஜன பெரமுனவின் கருத்துக்களுக்கு அடிபணிய வேண்டும் என்று அர்த்தமா?
"இல்லை. இது கருத்துக்கு சரணடைதல் அல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்தை தெரிவிக்ககும் உரிமை உள்ளது. அது இங்கே இல்லை. அந்த கூட்டணி உருவாகும் போது, பல கட்சிகள் அந்த பிரதான கட்சியைச் சுற்றி ஒரு கூட்டணியை உருவாக்கும். மற்ற கட்சிகளும் உள்ளன”.எனத் தெரிவித்தார்.