மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவை பெப்ரவரி 20 திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இதை வெளிப்படுத்தியது.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, இந்த மாதம் 20 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
நீதிமன்றம் பிணை
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.

அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சமன் ஏகநாயக்கவை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சமன் ஏக்கநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸவினால் பிணை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |