வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த சந்திரிகா குமாரதுங்க!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்கி குமாரதுங்க, தற்போது வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை சந்தித்துள்ளார்.
அதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, தாம் பொதுவாக சிறைகளுக்கு செல்லும் வழக்கம் இல்லை என்றும், ஆனால் ஏகநாயக்க நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி என தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
மேலும், குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் இணங்காத நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பது ஜே.ஆர் ஜயவர்தன ஆட்சிக் காலத்திலிருந்தே தொடங்கியது என குற்றஞ்சாட்டிய அவர், தற்போதைய அரசும் கடந்த அரசுகளின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிர்வாக சேவையில் சேர பெரும் திறனும் தகுதியும் அவசியம் என சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஏகநாயக்க போன்ற அனுபவமிக்க நிர்வாகிகள் நாட்டிற்கு தேவைப்படுகின்றனர் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, இந்த நிலைமையை எதிர்த்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் தான் சிறைக்கு சென்றதாகவும், “நான் அவருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன்; அவர் மிகவும் நல்லவர்” என்றும் சந்திரிகா குமாரதுங்க விவரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |