நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jul 08, 2026 06:37 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து மற்றும் ஆறாம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இன்று (08.07.2026) இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஹர்ஷன நாணயக்கார சென்றிருந்த போதே அதிகாரிகள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல்

உயிரிழந்த அதிகாரிகள்

உயிரிழந்த அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்ற அமைச்சரிடம் தங்களது குறைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்! | Negombo Prison Riot Police Officers Cried

இந்த கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும் எனவும் முறையான உத்தரவு கிடைக்காததன் காரணமாகவே இது இவ்வளவு பெரிய அழிவாக மாறியது எனவும் அவர்கள் வலியுருத்தியுள்ளனர்.

மேலும் தெரிவித்த அதிகாரிகள், “நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை ஐயா, துப்பாக்கிச் சூடு நடத்தவா என்று நாங்கள் அனுமதி கேட்டோம்.

FIFA உலகக்கிண்ணத்தில் ட்ரம்பின் அரசியல் தலையீடு! விசாரணைக்கு தயாராகும் EU

FIFA உலகக்கிண்ணத்தில் ட்ரம்பின் அரசியல் தலையீடு! விசாரணைக்கு தயாராகும் EU

நிலவும் பிரச்சினைகள்

எங்களுக்கு அந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம்.

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்! | Negombo Prison Riot Police Officers Cried

அவசர நிலைமையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அதிகாரத்தை எங்களுக்கு வழங்குங்கள்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் மனிதர்களைப் போல மிருகத்தனமானவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அதிகாரிகள், தங்களது பாதுகாப்பு தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

முறையான விசாரணை

மேலும், “இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கலாம் ஐயா. சுமார் 1500 பேர் வரை வெளியே வந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களும் அழிந்திருப்பார்கள்.

அந்த அதிகாரிதான் (உயிரிழந்த அதிகாரி) அதனைத் தடுத்துக் காப்பாற்றினார்” எனக் கூறி அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்! | Negombo Prison Riot Police Officers Cried

இதன்போது கருத்துத் தெரிவித்த ஹர்ஷன நாணயக்கார, இச்சம்பவம் தொடர்பாக அதிகபட்ச நீதி நிலைநாட்டப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பயிற்சிகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து புதிய கோணத்தில் சிந்தித்துச் செயற்படவுள்ளதாகவும் இது குறித்து முறையான விசாரணை நடத்தி நீதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 YOU MAY LIKE THIS...! 


ஈரானுடனான ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது : ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்

ஈரானுடனான ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது : ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026