CID யில் இன்று முன்னிலையாக முடியாது! ரணிலின் மனைவி சுட்டிக்காட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) இன்று (20) முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல்நலக் குறைவால் இன்றைய தினம் குறித்த பிரிவில் முன்னிலையாக முடியவில்லை என கடிதம் மூலம் அவர் அறியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பிரித்தானியாவிற்கான தனிப்பட்ட விஜயத்திற்காக 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அரச நிதியை முறைகேடு
இந்த விஜயத்திற்காக நிதியை அனுமதித்ததன் மூலம் அரச நிதியை முறைகேடு செய்ய உதவியதாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீது ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவின் 03ஆம் கிளையில் முன்னிலையாகுமாறு கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் ஊடாக அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சுகாதாரக் காரணங்களினால் இன்று சமூகமளிக்க முடியாது என அவர் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |