மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள கவலை
தன்னிச்சையாக அமைச்சு பதவி ஏற்பு
அரச அமைச்சுப் பதவிகளை நேற்று ஏற்றுக்கொண்டஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கீகாரத்தைப் பெறாமல், தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி இடைக்கால நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டால் மட்டுமே அரசாங்கத்தில் இலாகாக்களை ஏற்றுக்கொள்வது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாகவும் சிறிசேன விளக்கமளித்துள்ளார்.
மத்திய குழுவின் தீர்மானங்களுக்கு எதிரான செயற்பாடு
அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்படும் எம்.பி.க்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்காது என சிறிசேன கூறினார்.
எம்.பி.க்களின் நடவடிக்கை வெறுக்கத்தக்கது மற்றும் வருத்தமளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.