வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
A-9 வீதியில் கனகராயன்குளம் - பெரியகுளம் பகுதிக்கு அருகில் நேற்றிரவு (02) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பின்னால் வந்த ஹயஸ் வாகனம் கார் மீது மோதியதில் குறித்த கார் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை
இதன்போது இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |