மலேசியாவிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் சுற்றிவளைப்பு...!
போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று அதிகாலை 12.50 மணியளவில் வருகை தந்த விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுமார் ஒரு கிலோகிராம் எடையுடைய போதைப்பொருட்கள், பொதிகளாகப் பொதி செய்யப்பட்டுச் சந்தேகநபரின் பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் சந்தைப் பெறுமதி பத்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பிலுள்ள அபாயகரமான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சந்தேகநபர் இன்றைய தினம் (05-02-2026) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
விமான நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்குச் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |