கணவரை அடுத்து மலேஷிய முன்னாள் முதற்பெண்மணியும் சிறையில் அடைக்கப்படுகிறார்
மலேஷிய முன்னாள் முதற் பெண்மணி குற்றவாளி
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களை வழங்க இலஞ்சம் கேட்டதற்காகவும் பெற்றதற்காகவும் குற்றவாளி என மலேசிய நீதிமன்றம் வியாழன் அன்று தீர்ப்பளித்தது.
அவரது கணவர் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இன்றையதினம் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஜைனி மஸ்லான், அரசுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் வழக்கை நிரூபித்துள்ளது என்றார்.
சூரிய மின்சக்தி திட்டம்
70 வயதான ரோஸ்மா, 2016 மற்றும் 2017 ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தனது கணவர் ஆட்சியில் இருந்தபோது அரசாங்கத்திடம் இருந்து 279 மில்லியன் டொலர் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்காக இலஞ்சம் கேட்டு பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், இலஞ்சத்தை விட ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம், இருப்பினும் ரோஸ்மா கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தண்டனைக்கு தடை கோரலாம்.
ரோஸ்மா 187.5 மில்லியன் ரிங்கிட் ($41.80 மில்லியன்) இலஞ்சமாக கோரியதாகவும், திட்டத்தை வென்ற நிறுவனத்தின் அதிகாரியிடமிருந்து 6.5 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆடம்பரமான வாழ்க்கை முறை
நஜிப்பும் அவரது மனைவியும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம், நஜிப் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார், மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அவரது அரச நிதியான 1மலேஷியா டெவலப்மென்ட் பெர்ஹாட்டில் (1MDB) பல பில்லியன் டொலர் ஊழல் மோசடியுடன் தொடர்புடைய வழக்கில் அவரது தண்டனையை உறுதி செய்தது. மேலும் நான்கு ஊழல் வழக்குகளில் அவர் விசாரணையில் உள்ளார்.

