காட்டு யானையை சுட்டுக் கொன்ற நபர் கைது
காட்டுயானைக் கூட்டம் ஒன்று பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாது.
குறித்த சம்பவம் அநுராதபுரம் (Anuradhapura) - ஹிடோகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹல்மில்ல குளப்பகுதியில் நேற்று (23) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திர்ப்பனய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹல்மில்லக்குளம், தருவில பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களம்
பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்த போது, கூட்டத்தை விரட்ட முற்பட்ட வேளை, யானையொன்று சந்தேக நபரை துரத்தியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர் கையில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் காட்டு யானையைச் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் 7அடி, 3 அங்குலம் உயரம் கொண்ட 20 வயதுடைய ஆண் யானை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திர்ப்பனய வனவிலங்கு அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அலுவலகத்தின் தள உதவியாளர் உள்ளிட்ட குழுவினர் எச்.என்.பி.இ. ஹேரத் (HNPE. Herath), சம்பவம் நடந்த இடத்தை ஆய்விற்குற்படுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |