தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதிகள்: சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!
இரண்டு யுவதிகளுக்கு மதுபானம் அருந்த கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் விபரம்
அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், தலங்கம காவல்துறையில் பணியாற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.
நிவிதிகல, உடகரவிட்ட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணும் அவரது சகோதரன் திருமணம் செய்ய விருந்த பெண்ணுமே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் படி, விசாரணைகள் செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் நிவிதிகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்