வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் - நபர் ஒருவர் கைது!
கண்டி - அலவத்துகொட பகுதியில் வயலில் இருந்து சடலமாக பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது.
கண்டி - அலவத்துகொட பகுதியில் வயலில் இருந்து 25 வயதான திருமணமான பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு வேளையில் குறித்த பெண்ணின் கணவர் மரண வீடொன்றுக்கு சென்று வீடு திரும்பிய போது, மனைவி வீட்டில் இருக்கவில்லை.
நபர் ஒருவர் கைது
அதனையடுத்து, கணவர் காவல்துறையில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த பெண் வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் ஒருவர் கைதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
