யாழில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை - ஒருவர் கைது: இருவர் தலைமறைவு
யாழில் (Jaffna) காணி பிணக்கு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
குறித்த சம்பவம் நேற்று (16.02.2026) திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில்தெரிய வருவதாவது, குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை மாலைவேளை தனது தோட்டக்காணிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த வீட்டு நபர்கள் காணி பிரச்சனை தொடர்பில் முரண்பட்டுள்ளனர்.

முரண்பாடு முற்றிய நிலையில் மண் வெட்டியால் குறித்த நபர் மீது தாக்கியதில் பிடரி பகுதியில் குருதி வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட கொலையாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |