யாழில் 80 லட்சம் பணமோசடி: தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த இளைஞர்
யாழில் தவறான முடிவெடுத்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு, நான்காம் வட்டாரத்தை சேர்ந்த செல்வராசா லிபாஸ்கரன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார்.
தவறான முடிவு
இருப்பினும் அவர், கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் (13) பணத்தை கேட்டவேளை அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார்.
இதனால் விரக்தியில் 14 ஆம் திகதி அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் நேற்று (15) காலை வாந்தி எடுத்துவிட்டு மனைவியிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
மரண விசாரணை
பின்னர் அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

