வெளிநாடு செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
மூன்று நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஜேர்மனி, போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் அனுமதி
இந்த பயண எச்சரிக்கை, போலந்து நாடு தனது அண்டை நாடுகளுடன் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தொடர்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜேர்மனி புலம்பெயர்வோரை போலந்து நாட்டுக்குள் அனுமதிப்பதாக வலதுசாரி அமைப்புகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளன.
ஆகவே, போலந்தை ஆளும் வலதுசாரி அரசு, போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் அமைந்துள்ள 52 இடங்கள் மற்றும் லிதுவேனியா எல்லையிலுள்ள 13 இடங்களில் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புச் சோதனைகளை அறிமுகம் செய்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
ஏற்கனவே ஜேர்மனி தனது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. ஆக, இந்த மூன்று நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், எல்லைகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
எனவேதான், இந்த மூன்று நாடுகளுக்கும் செல்லும் பிரித்தானியர்களுக்கு வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையில், இந்த நாடுகளுக்குச் செல்லும் போது எல்லைகளில் உங்கள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கும் பிரித்தானியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்வதுண்டு அத்தோடு, லிதுவேனியாவுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,000 பிரித்தானியர்களும் மற்றும் போலந்துக்கு 600,000 பேரும் சுற்றுலா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

