தெஹிவளையில் தீ வைத்து நபரை கொலை செய்த சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது
தெஹிவளையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த கொலைச் சம்பவத்தின் பின்னர் கண்டி பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் வாகனமும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், குறித்த நபரை கொலை செய்ததாக சந்தேகநபர் காவல்துறையினரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சந்தேகநபர் ‘கொஸ்மல்லி’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும், கொலை செய்யப்பட்ட நபர் ‘படோவிட்ட அசங்க’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகாவாகவும் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் இருவருக்கும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் காவலவ்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |