மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

Mannar Supreme Court of Sri Lanka Sri Lankan Schools Education
By Shadhu Shanker Sep 12, 2023 08:09 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

 மேலும், “தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும்.தற்போது அதிகரித்து வரும் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.” என்று மேல் நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பில் கோடிட்டு காட்டினார்.

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 வயது மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார்.

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை | Mannar Principle Abused Case

மன்னார் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின் சட்ட மா அதிபரினால் மன்னார் மேல் நீதிமன்றில் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கிம் ஜோங் உன் ரஷ்யா செல்வது ஏன்!

கிம் ஜோங் உன் ரஷ்யா செல்வது ஏன்!

நீதிமன்ற தீர்ப்பு

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விளக்கம் இடம்பெற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை (11) வழக்கு தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது.

குற்றவாளி மீதான குற்றச்சாட்டுக்கள் நிகழ்வு – நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி எனக் கண்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை | Mannar Principle Abused Case

ஒரே அணியில் இணையும் வடகொரியா மற்றும் ரஷ்யாவின் ஆயுத விபரம்: பீதியில் மேற்கத்திய நாடுகள்

ஒரே அணியில் இணையும் வடகொரியா மற்றும் ரஷ்யாவின் ஆயுத விபரம்: பீதியில் மேற்கத்திய நாடுகள்

“குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், வழங்கத் தவறின் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்றும் மன்னார் மேல் நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பளித்தது.

வழக்குத் தொடுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி செஸான் மஹ்பூம் வழக்கை நெறிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்: சுனாமி குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படலாம்: சுனாமி குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025