குவிக்கப்படும் உக்ரைன் படைகள் - ரஷ்யாவிற்கு வலுக்கும் நெருக்கடி..!
ரஷ்ய வெளியுறவுத்துறையை சேர்ந்த உயர் அதிகாரியான அலெக்சி போலிஷ்சக் வழங்கிய பேட்டி ஒன்றில், "எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லை அருகே உண்மையில் உக்ரைனிய அரசாங்கம் தனது படைகளை குவித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
அது ரஷ்யாவின் பாதுகாப்பு திறனை ஆய்வு செய்யும் முயற்சியாக சீராக நடந்து வருகின்றது" என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. இந்த படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி
உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்கி வருகின்றன.
கடந்த வாரம் இந்த போரின் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உக்ரைனின் படைகள் பெரியளவில் போரில் ஈடுபட தொடங்கின.
இந்த நிலையில், உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷ்யா அனுப்ப முடிவு செய்தது.
இதுபற்றி பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்த வாரம் தெரிவித்தபோது, ரஷ்யாவிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் முதல் பகுதி வந்தடைந்துள்ளது.
ஒரு தடுப்பு நடவடிக்கைக்காகவே இவை குவிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
