பாகிஸ்தான் தலைநகர் அருகே பாரிய குண்டுவெடிப்பு! 31 பேர் பலி
பாகிஸ்தான் தலைநகர் அருகே அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் காவல்துறையினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மீட்புப் பணியாளர்களும் நேரில் கண்டவர்களும் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு சம்பவம்
காயமடைந்தவர்கள் காவல்துறை மற்றும் பொதுமக்களால் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும், நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ஷியா வழிபாட்டாளர்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்குக் காரணமான பாகிஸ்தான் தலிபான் அல்லது ஐ.எஸ் போன்ற குழுக்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |